தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும் ?” எனக் கேட்டார் . கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர் . பேச்சாளார் “ உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன் ” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார் . பிறகு அதை சரி செய்து “ இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா ?” என்றார்கள் . அனைவரும் கையைத் தூக்கினர் . அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “ இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர் . அவர் தொடர்ந்தார் “ கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை . ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்க...