Posts

Showing posts from 2017

திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14)

திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14) நிகழ்வு மிகச்சிறந்த மறைபோதரும் பேராயருமான புல்டன் ஷீன் ஒருமுறை குறிப்பிட்ட வார்த்தைகள்: “நான் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றேன். அவையெல்லாம் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் நான் எழுதிய இயேசுவின் வாழ்க்கை வரலாறு (Life of Christ) என்ற புத்தகம் சிலுவையின்மீது அறையப்பட்ட இயேசுவின் பேரன்பை, அவர் இந்த மனுக்குலத்தின்மீது கொண்டிருந்த இரக்கத்தை உணர்ந்துகொள்வதாகவே எழுதப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த கிறிஸ்துவின் பேரன்பை விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை”. வரலாற்றுப் பின்னணி 312 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், உரோமையை ஆண்டுவந்த கொன்ஸ்டன்டின் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர்தொடுக்கச் சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர்தொடுக்கச் செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்திச் சென்றான். இதனால் அவன் அந்தப் போரில் வெற்றிபெற்றான். அதன் நிமித்தமாக கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். இது நடந்து 13 ஆம் ஆண்டுகள் கழித்து, கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசல...

அன்னையர் தினம்: second sunday of May

Image
நாளை அன்னையர் தினம்: தாயை இறுதிவரை காப்போம் தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் அனைவரும் தாயை இறுதிவரை காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான். மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத்தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலமும், இந்திய நாட்டின் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கோசலராமன், கங்கைமைந்தன், குந்திநந்தனன் என்று தாயின் பெயருடனே அழைக்கப்பட்டதன் வழியும் காண்கிறோம். தாய் என்ற சொல்லில் இருந்துதான் தாயம் என்ற சொல் பிறந்தது. தாயம் என்றால் உரிமை என்று பொருள். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே அதாவது தாயே வேட்டையாடுபவளாக இருந்து தன் மக்களை காப்பாற்றி வளர்ப்பவளாகவும், தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தாள். பொருள்சார்ந்த வாழ்க்கை தொடங்கும்போது, நிலவுட...

வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னை ஆலயம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை..

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது. 01. 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடா பிரதேசங்கள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின. அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை சங்கிலியன் மன்னன் ஆண்டு வந்தான். 02. இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்து வந்த கிறீஸ்தவர்கள் யாழ்ப்பாண இராட்சியத்தில் கிறீஸ்துவைப் பற்றி அறிந்திராத பாமர மக்களுக்கு வேதவசனங்களை சிறிது சிறிதாக போதிக்கலாயினர். 03. இவர்கள் மூலமாக புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் வேதம் போதிக்கும் ஆற்றலையும், புதுமைகளையும், கேள்வியுற்ற மன்னார் வாசிகள், 1544 இல் இப்புனிதரை மன்னார்த் தீவுக்கு, வருமாறு ஓர் தூதுவர் மூலமாக ஒலை அனுப்பினர். 04. புனித சவேரியார் திருவாங்கூரில் சமய அலுவல்களில் மும்முரமாக இருந்த காரணத்தினால் தமது நாமம் பூண்ட ஓர் குருவானவரை யாழ்ப்பாண இராட்சியத்திற்கு மன்னார் ஊடாக அனுப்பி வைத்தார். 05. ச...

பெரிய வியாழன் முதலாம் ஆண்டு

பெரிய வியாழன் முதலாம் ஆண்டு நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள். விடுதலைப்பயனம் 12:1-8, 11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15 இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நாள் நமது கத்தோலிக்க திருச்சபையின் மிக முக்கியமான நாள். இன்றைய நாளில் தான் ஆண்டவர் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். நற்கருணை தான் நமது திருச்சபையின் அடித்தளம். எனவே இந்த நற்கருணை கொண்டாட்டத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் இப்போது கோயிலுக்கு வந்துகொண்டு இருக்கிறீர்கள். தீடீரென ஒரு காட்சி. உங்கள் முன்னால் மிக ஜெகஜோதியாக அன்னை மரியாள் காட்சி தருகிறரர்கள் அருகிலே உங்களுக்கு பிடிக்காத ஒரு பங்குத்தந்தை அங்கு நின்று கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். முதலில் யாருக்கு வணக்கம் செலுத்துவீர்கள்? அன்னை மரியாளுக்கா? அல்லது பிடிக்காத அந்த பங்கு தந்தைக்கா? இதே கேள்வியை ஒரு முறை புனித அசிசி பிரான்சிஸிடம் புனித லாரன்ஸ் கேட்டாராம் அதற்கு புனித அசிசியார் கூறுவார் முதலில் நான் சென்று குருவானவரின் கரங்களை முத்திசெய்வேன் அதன் பிறகு அன்னை மரியாளிடம் நான் செல்வேன் எ...

உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு

Image
உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு தோமா அவர்களோடு இல்லை! திருத்தூதர்பணிகள் 2:42-47 1 பேதுரு 1:3-9 யோவான் 20:19-31 உயிர்ப்புக் காலத்தில் நாம் வாசிக்கும் நற்செய்தி பகுதிகளில் வரும் கதைமாந்தர்களில் என் இதயம் தொட்டவர்கள் இரண்டு பேர்: ஒன்று, மகதலா மரியா. இரண்டு, தோமா. உயிர்த்த ஆண்டவரை இறுகப் பற்றி கட்டி அணைத்துக் கொண்டவர் மகதலா மரியா. உயிர்த்த இயேசுவின் உடலைத் தன் கையால் ஊடுருவியவர் தோமா. உயிர்த்த ஆண்டவர் வெறும் ஆவி அல்லர் என்பதற்கும், அவருக்கென உடல் இருந்தது என நிரூபிப்பதற்குமாக என இவர்களின் செயல்களால் நம் நம்பிக்கை இன்னும் வலுப்பெறுகிறது. தோமா என்ற கதைமாந்தரை நன் இன்றைய சிந்தனைப் பொருளாக எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில், 'டவுட்டிங் தாமஸ்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதாவது, எதையும் எளிதாக நம்பாமல் ஐயம் கொண்டிருக்கும் மனநிலை தான் 'டவுட்டிங் தாமஸ்.' நாம் எல்லாரும் தோமையாரை 'டவுட்டிங் தாமஸ்' என சொல்லிவிடுகிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருள்ளும் நிறைய டவுட்டிங் தாமஸ் இருக்கிறார்கள்: 'அலார்ம் கரெக்ட்டான நேரத்திற்கு அடிக்குமா?' 'நாம் அன்பு ச...

திருப்பாடுகளின் வெள்ளி

திருப்பாடுகளின் வெள்ளி விரக்தி மேலாண்மை எசாயா 52:13-53:12 எபிரேயர் 4:14-16, 5:7-9 யோவான் 18:1-19:42 எருசலேமுக்குள் இயேசு நுழைந்தபோது இருந்த மக்கள் கூட்டம் எங்கே? அவர்களின் ஓசான்னா ஆரவாரம் எங்கே? அவர்களின் தாவீதின் மகன் எங்கே? அவர்களின் புகழ்பாடல் எங்கே? அவர்கள் சாலைகளில் விரித்த ஆடைகள் எங்கே? அவரோடு உடன்வந்த சீடர்கள் எங்கே? அன்று அவர்களோடு இருந்த நம்பிக்கை எங்கே? வாடகைக் கழுதையில் ஏறி வந்த அவர்களின் இறுதி நம்பிக்கை இங்கே கல்வாரியில் சிலுவையில் தொங்குகிறது. ஆரவாரம் அடங்கி எங்கும் மௌனமாக இருக்கிறது. மோகன ராகம் எல்லாம் முகாரி ராகம் ஆகிவிட்டது. ஆர்ப்பரிப்புகள் அடங்கி ஒப்பாரி தொடங்கிவிட்டது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, உடல் குத்தப்பட்டு, உயிர் பிரிந்து தொங்குகிறது ஒரு உடல். அவர்களின் நம்பிக்கை விரக்தி ஆகிவிட்டது. 'நான் உம்மை மெசியா என்று நம்பினேன். ஆனால் நீயோ இங்கே சிலுவையில் ஒரு தோல்வியாய் மரித்துப் போனாய். நீ 'இவ்வுலக அரசன் அல்ல. மறுவுலக அரசன்' என்றாய். எனக்கு இவ்வுலகையும், மறுவுலகையும் பிரித்துப்பார்க்க முடியவில்லையே? நான் இன்று அனுபவிக்கும் உரோ...