Posts

Showing posts from May, 2018

மூவொரு இறைவன் பெருவிழா

மூவொரு கடவுள் - year 2 மறையுரைச் சிந்தனை மூவொரு இறைவன் பெருவிழா ‘உலக முடிவுவரை எந்நாளும் நம்மோடு இருக்கும் மூவொரு இறைவன்! ஒருமுறை ஒரு நகரப் பங்கில் உறுதிபூசுதல் கொடுப்பதற்காக ஆயர் அவர்கள் சென்றிருந்தார்கள். வழிபாட்டின்போது ஆயர், பின்வரிசையில் உறுதிபூசுதல் பெற இருந்த சிறுமி ஒருத்தியிடம், “மூவொரு கடவுள் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார்” என்று  பதிலைச் சொன்னாள். ஆனால், சிறுமி சொன்னது ஆயரின் காதில் சரியாக விழாமல் போகவே, அவர் மீண்டுமாக அந்தச் சிறுமியிடம், “நீ சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. மீண்டுமாக அதைச் சொல்” என்றார். சிறுமியோ, “மூவொரு கடவுளைப் பற்றி முழுமையாக விளக்கமுடியாது, அது ஒரு மறைபொருள். அதை அப்படியேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னதும், ஆயர் மிகவும் ஆச்சரியப்பட்டுபோய், அந்தச் சிறுமியை வாழ்த்தினார். ஆம், ‘மூவொரு இறைவன்’ என்பது ஒரு மறைபொருள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒழிய, அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். இன்று நாம் மூவொரு கடவுளது பெருவிழாக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில் இப்பெருவி...

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு Year 2

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு  (திப 9: 26 -31 ; 1 யோவா 3: 18 -24 ; யோவா 15: 1-8) இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்! டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி. அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்று எழுதி வைத்தார்கள். இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள். குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்க...

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு Year 2

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு Year 2 (திப 10:25-26, 34-35, 44-48; 1 யோவா 4:7-10 ; யோவா 15: 9-17) “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ளுங்கள்” ஒபேரா நடனத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் எர்னஸ்டைன் ஸ்கூமென் (Ernestine Schumann) அவருடைய கலையுலகின் தொடக்க காலகட்டத்தில் அவரது கணவர் அவரைவிட்டுப் பிரிந்துபோனார். இதனால் அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுப்பட்டார். கையில் ஒரு பைசாகூட இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய வாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என அவர் தீர்மானித்தார். எனவே அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துகொண்டு தண்டவாளத்தில் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தாள். அப்போது எர்னஸ்டைன் ஸ்கூமெனின் மகள்களில் ஒருத்தி, “அம்மா! நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார். இக்கட்டான அந்த சூழ்நிலையில் மகளின் குரல் கடவுளின் குரலை போன்று அவருக்குக் கேட்டது. இதனால் அவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். ஒருசில ஆண...

விண்ணேற்றப் பெருவிழா (Year 2)

விண்ணேற்றப் பெருவிழா (Year 2) (திப 1:1-11 ; எபே 4: 1-13 ; மாற் 16: 15-20) விண்ணேறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இயேசு! ஒரு சமயம் பிரபல மறைபோதகரான பில்லி கிரகாம் (Billy Graham) ஒரு நகருக்கு போதிக்கச் சென்றார். அவ்வாறு அவர் போதிக்கச் சென்றபோது உடனடியாக அனுப்பவேண்டிய ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக அந்நகரில் இருந்த அஞ்சல் நிலையத்தை நீண்ட நேரமாகத் தேடினார். எவ்வளவுதான் அவர் கடுமையாகத் தேடினாலும் அவரால் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக ஓர் இளைஞன் வந்தான். அவனை நிறுத்திய பில்லி கிரகாம், “இந்த நகரில் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது?” என்று கேட்டார். அவனும் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று மிகத் தெளிவாக சுட்டிக்கட்டினான். அவன் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று சரியாகச் சுட்டிக்காட்டியதைக் கண்டு மகிழ்ந்துபோன அவர், அவனிடம், “தம்பி! நான் பாப்டிஸ்ட் திருச்சபையைச் சார்ந்த ஒரு மறைபோதகர். இன்று மாலை இங்கிருக்கும் ஆலயத்தில் மக்களுக்கு எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதற்கான வழியைச் சுட்டிக்காட்டப் போகின்றேன். நீயும்...