Posts

Showing posts from November, 2016

திருவருகைக் கால வளையம் - Advent wreath

Image
திருவருகைக் கால வளையம் - Advent wreath (விக்கிபீடியா (Wikipedia) வழியாக அறிந்துகொண்ட தரவுகளது அடிப்படையில் எழுதப்பட்டது) திருவருகைக் காலம் நமதாண்டவர் இயேசுவின் முதல் வருகையினை எமக்கு நினைவுபடுத்தி உலக முடிவில் அவரது இரண்டாவது வருகையினை எதிர்பார்க்கும் காலமென அன்னையாம் திருச்சபை எமக்குப் படிப்பிக்கின்றது. ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிறைந்த எண்ணக்கருக்களை எமதுள்ளங்களில் விதைக்கும் காலமென்றும் நாம் கருதலாம். எதிர்பார்ப்பு, தயாரிப்பு, வரவேற்பு என்று பல கோணங்களில் திருவருகைக்காலம் எம்மை சிந்தித்துத் தியானிக்க அழைக்கின்றது மேற்குலக நாடுகளில் வாழும் கத்தோலிக்க விசுவாசிகள் திருவருகைக் காலத்தில் குறிப்பாக ஆலயங்களில் வட்ட வடிவமான திருவருகைக் கால வளையம் (Advent wreath) எனப்படும் ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாக ஞாயிறு திருப்பலி வழிபாட்டு வேளைகளில் ஏற்றி வைப்பதுண்டு. மெழுகு திரிகள் ஏற்றப்படுதல் வெளி அடையாளமாக இருப்பினும், அவை மனித இதயங்களில் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி, குடும்பங்களில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் உண்மைத் தன்மையை இழந...

திருவருகைக்கால 01ம் வார ஞாயிறு

Image
திருவருகைக்கால 01ம் வார ஞாயிறு “இறுதிக்காலம் இதுவே“ - மத்தேயு 24 : 37 – 44 திருவருகைக் கால முதலாம் ஞாயிறிலிருந்து அன்பின் ஆண்டின் திருவழிபாட்டு ஆண்டை தொடங்குகிறோம். அன்று இஸ்ரயேல் மக்கள் தளைகளிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப்பின் தொடக்க காலத்திருச் சபையிலிருந்து நாமனைவரும் எமது மீட்பராம் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக் காகக் காத்திருக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக அவதரித்த இயேசு மீண்டும் பிறக்கமாட்டார். மாறாக, அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக வர இருக்கிறார். அவரது வருகைக்காக நாம் காத்திருக்க வேண்டும். காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால் காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும். இத்திருவருகைக் காலத்தில் நாம் தாய்த்திருச்சபையோடு இணைந்து எமது ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடினாலும், அவரது இரண்டாம் வருகைக்காகத் தயார்படுத்த நம...

முற்பகல் செய்த வினை பிற்பகல் தானே வரும்.

படித்ததில் பிடித்தது.... நகரத்து வீதியில் ஒரு கார் சென்றுகொண்டு இருக்கிறது.... உள்ளே ஒரு கணவன் மனைவி, ஐந்து வயது மகன், வயதான அப்பா! நான்குபேரும் பயணிக்கிறார்கள். கணவன் காரை ஓட்ட, மனைவி அருகில் உட்கார்ந்து இருக்க, குழந்தை பின் சீட்டில் தாத்தாவோடு விளையாடிக் கொண்டு இருக்கிறான்! கார் ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிற்க அவன் இறங்கி தந்தையிடம் இருந்த மருந்துசீட்டை வாங்க, தந்தை: சும்மா ஒரு நாலு நாளைக்கு வாங்கிக்கப்பா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க.... மகன்: நீங்க சும்மாருங்கப்பா. டாக்டர் சொன்ன மாதிரி ஒரு மாசத்துக்கு வாங்கிக்கலாம் எல்லா மருந்தும். சரியா ஒரு மாசம் சாப்டிங்கன்னா எல்லாம் சரியாயிடும்.... என்றபடி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்! குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந்தான்! அடுத்ததாக கார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நின்றது. மகன், ''என்னென்ன பழங்கள் புடிக்கும் அப்பா?'' என்று தந்தையிடம் கேட்க, ''எதாவது கால்கிலோ வாங்கிட்டு வாப்பா... போதும்! எதுக்கு தேவையில்லாத செலவு'' என்று ...

புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) :

Image
புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) : செசீலியா உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில்  கத்தொலிக்க கிறிஸ்தவத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளான வேதகலாபனையின் காலத்தில் கி.பி.200-ல் ரோமில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே இனிமையாக பாடும் திறமை பெற்றிருந்தார். இறைவனுடைய அன்பிற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தாள். தன்னுடைய கன்னிமையை இயேசுவுக்காக கையளித்தார். ஆனால் அவர்கள் பெற்றோர் ஏற்கவில்லை. வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப் பட்டார் ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். இவரது மன உறுதியையும் திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப் பாடப்பட்ட பாடலிலே தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை உறுதி செய்தார் புனித செசிலியா. அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவ...

புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) :

Image
புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) : செசீலியா உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில்  கத்தொலிக்க கிறிஸ்தவத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளான வேதகலாபனையின் காலத்தில் கி.பி.200-ல் ரோமில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே இனிமையாக பாடும் திறமை பெற்றிருந்தார். இறைவனுடைய அன்பிற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தாள். தன்னுடைய கன்னிமையை இயேசுவுக்காக கையளித்தார். ஆனால் அவர்கள் பெற்றோர் ஏற்கவில்லை. வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப் பட்டார் ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். இவரது மன உறுதியையும் திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப் பாடப்பட்ட பாடலிலே தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை உறுதி செய்தார் புனித செசிலியா. அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவ...

6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள் .படிக்கும் போது பாருங்கள் .

6 ஆழகான குட்டி உன்மை சம்பவங்கள் .படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சி வச பட வைக்கும் சம்பவம்-1 ---------------- 24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்," மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான். "அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள் நம்மோடு வருகின்றன..; என்றான். இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம். என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்." அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். ச...

ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!

ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 மூலிகைகள்! துளசி * துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும். * ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும். * தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும். * சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர… பலன் கிடைக்கும். கற்றாழை * சோற்றுக் கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து சாப்பிடலாம். அல்லது மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம் (அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால், நன்கு கழுவிவிடவும்). இதன் மூலம் உடல் சூடு குறையும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ச...

Do you know the meaning of_ * "GOOD MORNING"???*

Image
🌴 🐬  _Interesting meaning of 'good morning'_ _( We all say Good Morning to others. Do you know the meaning of_ * "GOOD MORNING"???* * 🐬 G* Get up. * 🐬 O* Open your heart. * 🐬 O* Open your mind. * 🐬 D* Dedicate your day to God. * 🐬 M* Meditate. * 🐬 O* Optimise your resources. * 🐬 R* Rebuke all negative thoughts. * 🐬 N* Never underestimate your potential. * 🐬 I* Inspire someone. * 🐬 N* Never loose faith. * 🐬 G* Go out with joy & confidence. * 🐬 So, I say  🙏 * _ 🌺  Good Morning