Posts

Showing posts from October, 2016

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02) இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள் ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார். ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே செ...

அனைத்துப் புனிதர்களின் விழா

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01) அனைத்துப் புனிதர்களின் விழா புனிதர்கள் – தூயவர்கள் – வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் படிப்பது போன்று, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது. முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று ...

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?

பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பைபிள் படித்துக்கொண்டே இருப்பார் . இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான் . ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான் , " தாத்தா ! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே ... இதை எத்தனைநாளா படிக்கிறீங்க ?" என்றான் . பெரியவர் சொன்னார் , " ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ". " அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே ! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க ?" என்றான் . தாத்தா சிரித்தபடி கூறினார் , " எனக்கு ஒரு உதவி செய் . நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன் ". இளைஞன் கேட்டான் , " என்ன உதவி தாத்தா ? " பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார் . அதில் அடுப்புக் கரி இருந்தது . அதை ஒரு மூலையில் கொட்டினார் . பல நாட்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மா...

ஜெபமாலை யார் சொல்லிக்கொடுத்த ஜெபம்?

ஜெபமாலை யார் சொல்லிக்கொடுத்த ஜெபம் ? அதில் யார் யாரெல்லாம் மகிமை படுத்தப்படுகிறார்கள் ? “ அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே “ லூக்காஸ் 1 : 28 இந்த வார்த்தைகள் கபரியேல் தூதர் அன்னை மரியாளைப்பார்த்து சொல்லிய வார்த்தைகள் . கபரியேல் தூதரிடம் இவ்வார்த்தைகளை சொல்லச் சொல்லி அனுப்பியவர் மூவொரு கடவுளில் பிதாவாகிய தந்தை . ஆண்டவருடைய வார்த்தைகளை கபரியேல் தூதர் ஒரு கடவுளின் செய்தியை ( தபால்காரல் போல் ) கொண்டு வந்து அன்னையிடம் சேர்த்துள்ளார் . ஆகவே அந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் பிதாவாகிய கடவுள் . ஆகவே அருள்நிறை மந்திரத்தின் முதல் இரண்டு வரிகளை இயற்றியது பிதாவாகிய கடவுள் . அது கடவுளின் வார்த்தை அவ்வார்த்தைகளை சொல்லி நாம் ஜெபிக்கும்போது கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார் . “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே “ லூக்காஸ் 1 :42 இது எலிசபெத் அம்மாள் சொல்லியவார்த்தை எப்போது சொல்கிறார் . பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ச...

*திவ்ய திருப்பலி*

திவ்ய திருப்பலி *1. திருப்பலியை விட அதிக பரிசுத்தமானதும் , மேலானதுமான ஒரு செயலைக் கடவுளும் கூட நிறைவேற்ற முடியாது என்று கூறுகிறார் அர்ச் . லிகோரியார் .* *2. சர்வேசுரனுடைய திருச்சுதன் பீடத்தின் மீது , குருவானவருடைய கரங்களில் தோன்றும்போது , மனிதன் நடுங்க வேண்டும் . உலகம் அதிர வேண்டும் . மோட்சம் முழுவதும் ஆழமாக நெகிழ்ச்சியடைய வேண்டும் என்று அர்ச் . பிரான்சிஸ் அசிசியார் கூறுகிறார் .* *3. திருப்பலி மட்டுமே கடவுளின் நீதியின் கரத்தைக் தடுத்து நிறுத்த முடியும் என்று சேசுவின் அர்ச் . தெரேசம்மாள் கூறுகிறார் .* *4. திருப்பலி நமக்குப் பெற்றுத் தருகிற நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் முடியாது . பாவி , கடவுளோடு மீண்டும் ஐக்கியமாகிறான் ; நீதிமானோ மேலும் அதிக நேர்மையுள்ளவனாகிறான் ; பாவங்கள் கழுவி போக்கப்படுகின்றன ; துர்குணங்கள் அளவிலும் கடுமையிலும் குறைகின்றன ; புண்ணியமும் , தகுதியும் வளர்ச்சி பெறுகின்றன . பசாசின் திட்டங்கள் தவிடுபொடியாகின்றன என்று அர்ச் . லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார் .*   *5."...