Posts

Showing posts from March, 2018

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு (31-03-2018) (புனித சனி நடுஇரவு திருப்பலி வாசகங்கள்) பாஸ்கா திருவிழிப்பு பாஸ்கா திருவிழிப்புக்கென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் தரப்பட்டுள்ளன. தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, இவ்வாசகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம். என்றாலும் பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது இருக்கவேண்டும்; ஆனால் மிக முக்கியமான காரணங்கள் இருந்தாலும்கூட, ``செங்கடலைக் கடத்தல்" பற்றிய விடுதலைப் பயண நூல் வாசகம் (3ஆம் வாசகம்) ஒருபோதும் விடப்படலாகாது. மூன்று பழைய ஏற்பாடு வாசகங்களுக்குப் பின் திருமுகமும், நற்செய்தி வாசகமும் வாசிக்கப்படும். இன்றைய திருப்பலி வாசகங்கள் : 1. தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:3 , 2. பதிலுரைப் பாடல் : விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 3. யாத் 14:15-15:1, 4. எசாயா 54:5-14 5. எசாயா 55:1-11 6. எசேக்கியேல் 36:16-28 7. உரோமையர் 6:3-13 8. மாற்கு 16:1-7 திருப்பலி முன்னுரை சாவை வீழ்த்தி வெற்றி கிடைக்க சரித்திர நாயகன் இயேசு, உயிர்க்கப் போகும் உன்னத இரவு இன்று...

பாஸ்கா திருவிழிப்பு

பாஸ்கா திருவிழிப்பு முன்னுரை இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இந்நாள் நமக்கெல்லாம் பொன்னாள். மகிழ்ச்சியின் நாள். இன்றைய இரவு வெற்றியின் கொண்டாட்டமாகவும், மகிழ ்ச்சியின் ஆரவாரமாகவும் திகழ்கிறது. திருச்சபையும், நம் விசுவாச வாழ்வும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது பிறப்பையும் புதுத்தெம்பையும் பெறுகிறது. பாஸ்கா என்ற எபிரேய சொல்லுக்கு ‘கடத்தல்’ அல்லது ‘கடந்து போதல்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள், செங்கடலையும், எகிப்தின் அடிமைத்தனத்தையும் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சுதந்திர குடிமக்களாக வந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பில் பாஸ்கா நமக்கு ஒரு புதிய பொருளைக் கற்றுத் தருகிறது. அதாவது, பாவத்திலிருந்து - புனித வாழ்விற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து நிலைவாழ்விற்கும் இயேசுவோடு நாம் கடந்து வருவதைத்தான் இந்த புதிய பாஸ்கா நமக்கு உணர்த்துகிறது. இனியும் நாம் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் செயலுக்கு உட்பட்டவர்கள். நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களாய், புது வாழ்வு பெற்றவர்களாய் வா...

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.*

Image
*ஒரு சின்ன கதை :* *வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.* *அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.* *அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.* *அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.* *கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.* *பறவை இனம் பெருகியது*. *பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.* *அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. அதனால் எதிரிகளுக்கு உணவானது* *மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.* *பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்)* *எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது*. *அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டு மென்று கொடுத்து அழகு பார்க்கிறோம். அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.* *பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது*. *அதே போல் தான் அதிகம் செல்லம் கொ...

இறைவா ! என்னை mobile phone ஆக ஆக்கிவிடு

இறைவா ! என்னை mobile phone ஆக ஆக்கிவிடு ***************************************** ஒரு ஆசிரியை தன் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் நீங்கள் இறைவனிடம் விரும்பியதை கேட்பதாக வைத்துக்கொண்டு அதனை ஒரு கட்டுரையாக எழுதித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.மாணவர்களும் தங்களது விருப்பங்களை கட்டுரையாக எழுதிக் கொடுத்தார்கள். அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அவள் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தாள்.அந்த கட்டுரைகளில் ஒன்று அவழுடைய மனதைத் தொட்டு விட்டது.அழ ஆரம்பித்து விட்டாள்.அந்த நேர ம் வீடு வந்த கணவன் இதனைப் பார்த்து விட்டு ஏன் அழுகிறாய் என வினவினான். ஒரு மாணவரின் வரிகள் என்னை அழ வைத்து விட்டன என்றாள்.என்ன எழுதியுள்ளார் என அவர் வினவ, இதோ எடுத்துப் படித்துப் பாருங்கள் என கொடுத்தாள்.அவர் வாசிக்க ஆரம்பித்தார்....... இறைவா! என்னை நீ mobile phone ஆக ஆக்குவாயாக என்று விசேட பிரார்த்தனை செய்கின்றேன்.ஏனெனில் • வீட்டில் பிரத்தியேக இடம் கிடைக்கும் • எந்த இடையூறுகளும் இல்லாமல் நான் சொல்வதைக் கேட்பார்கள் • என் தந்தை களைப்படைந்து வேலையிலிருந்து வரும் வேளைகளில் அவருடைடைய ...

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு Year 2

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு (எரே 31: 31-34; எபி 5: 7-9; யோவா 12: 20 -33) மடிந்து பலன்தரும் கோதுமைமணிகள் ஆவோம்! முன்பொரு காலத்தில் டெலமசுஸ் (Telemachus) என்னும் துறவி பாலைவனத்தில் தங்கி, அங்கே சிலகாலம் தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார். ஒருநாள் அவருடைய உள்ளுணர்வு ‘நீ உரோமை நகருக்குச் செல். அங்கு நடைபெறுகின்ற கிளாடியேட்டர் விளையாட்டைப் பார்’ என்று சொல்லியது. உடனே அவர் பாலைவனத்திலிருந்து கிளம்பி உரோமை நகருக்குச் சென்று, கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெறுகின்ற அரங்கத்திற்குள் சென்றார். இரண்டு பேர் பயங்கரமாக அடித்துக்கொண்டு சாவதுதான் இந்த விளையாட்டின் உள்ளடக்கம். கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெற இருந்த அந்த அரங்கில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடி இருந்தார்கள். சிறுது நேரத்திலேயே விளையாட்டு தொடங்கியது. இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்டார்கள். கூட்டம் அவர்கள் சண்டையிடுவதைப் பார்த்து, ஆரவாரம் செய்து மகிழ்ந்தது. இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவது ஒருபோதும் கூடாது என நினைத்த டெலமசுஸ் மைதானத்திற்கு உள்ளே சென்று, சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு...

ஜெபமாலை

  ஜெபமாலை தந்தை ; மகன்; தூயஆவியாாின் பெயராலே.  ஆமென் அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்திற் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதை சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதை செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொட...

புனித தேவமாதாவின் பிராத்தனை

Image
புனித தேவமாதாவின் பிராத்தனை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுவரா- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ... கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ... மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே... கிறிஸ்துவினுடைய மாதாவே... தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே... மகா பரிசுத்த மாதாவே... அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே.. பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே... கன்னி சுத்தங்கெடாத மாதாவே... மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே... ஆச்சரியத்துக்குரிய மாதாவே... நல்ல ஆலோசனை மாதாவே ,,, சிருஷ்டிகருடைய மாதாவே... இரட்சகருடைய மாதாவே... மகா புத்த...

இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை.

இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை. ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும். உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும். என்றும் வாழும் பிதாவின் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். மனிதனாய்ப் பிறந்த இறைவாக்காகிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். புதிய, முடிவில்லா உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். வியர்வையாகத் தரையில் வழிந்தோடிய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டபோது சிந்திய கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். முள்முடி சூட்டியபோது வெளியான கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். சிலுவையில்; சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமே,- எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் மீட்பின் விலையான கிறிஸ்துவின் இரத...

தவக்காலம் நான்காம் ஞாயிறு Year 2

Image
தவக்காலம் நான்காம் ஞாயிறு (குறி 36: 14 -16, 19-23; எபே 2: 4-10 ; யோவா 3: 14-21) நம் மீட்புக்காக தம் ஒரே மகனையே கையளித்த அன்பின் ஊற்று இறைவன்! சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சோ என்பவர். நீதி வழுவாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், மக்களால் இன்றும் அவர் நினைவு கூரப்படுகின்றார். ஸ்பெயின் நாட்டை அல்போன்சோ ஆட்சி செய்த சமயத்தில் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பயங்கரச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் முகமதியர்கள் சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, மன்னரின் மகனை அதாவது இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்து போனார். இச்சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, முகமதியர்களிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், “உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா? இல்லை உன்னுடைய மக்கள் வேண்டுமா? மகன் வேண்டும் என்றால், நாங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். இல்லை உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றா...

எத்தனை முறை மன்னிப்பது?

எத்தனை முறை மன்னிப்பது? கடந்த நூற்றாண்டில் நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய மகான் ஏகநாதர் என்பவர். அவர் மிகுந்த அ ன்பிற்கும் பொறுமைக்கும் பெயர்போனவர். ஒருநாள் அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடிக்காத ஒருவன், தனது வீட்டின் மேல் மாடியிருந்து வாய் கொப்பளித்த நீரை அவர்மீது உமிழ்ந்தான். ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசவில்லை. மாறாக, மீண்டுமாக கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போதும் ஏகநாதரைப் பிடிக்காத அந்த மனிதன் அவர்மீது உமிழ்ந்தான். இந்த முறையும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல், ஆற்றில் குளித்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பி வந்தார். மறுபடியும் அந்த மனிதன் ஏகநாதர் மீது உமிழ்ந்தான். அப்போதும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்துவந்தார். இப்படி அந்த மனிதன் நூற்றுஎட்டு முறை ஏகநாதர்மீது உமிழ்ந்தபோதும், ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்து வந்தார். இதற்கிடையில் ஏகநாதர்மீது தொடர்ந்து உமிழ்ந்துகொண்...

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு Year - 02

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (விப 20: 1-17; 1 கொரி 1: 22-25; யோவா 2 :13 -25) உயிருள்ள ஆலயங்களாவோம்! அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். கூட்டுக்குடும்பமும் கூட. அந்தக் குடும்பத்தில் இருந்த வயதான பாட்டி மட்டும் வாராவாரம் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு வருவார். இது அந்தக் குடும்பத்தில் இருந்த இரண்டு சிறுவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஒருநாள் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகிய ஜான் பாட்டியிடம், “பாட்டி! நீங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு வருகின்றீர்கள். அது தொடர்பாக உங்களிடத்தில் நான் ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும்” என்றான். “சரி கேள்” என்றாள் பாட்டி. “பாட்டி! கடந்த வாரம் பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார். அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றான் ஜான். “அதெல்லாம் எனக்கு மறந்துபோய்விட்டதுபா” என்றாள் அவள். “பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார் என்றுகூடச் சொல்லவேண்டாம், எதைப் பற்றி மறையுரை ஆற்றினார். அதைப் பற்றியாவது சொல்லுங்கள்” என்றான் அவன். அதற்குப் பாட்டி அவனிடம், “பங்குத்தந்தை எதைப் பற்றி மறையுரை ஆற்றினார் ...

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு Year - 02

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (தொநூ 22: 1-2, 9-13, 15-18, உரோ 8: 31 -34, மாற் 9: 2-10) பாடுகளின் வழியே பரலோகத்திற்கான வழி! ஒரு காலத்தில் அண்டை நாடுகளான ஏதென்சிற்கும் டோரியனுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டிருந்தது. டோரியன் நாடானது ஏதென்சை விட வலிமையான படைபலத்தைக் கொண்டிருந்தது. அதனால் அந்நாடு எந்த நேரத்திலும் ஏதென்சின்மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டு அரசனாகிய கோட்ருசை (Codrus) சிறைபிடிக்கலாம் எனத் திட்டம் தீட்டியது. இப்படித்தான் டோரியன் நாட்டுப் படையானது ஏதென்சின்மீது படையெடுத்து வந்து, ஏதென்சின் எல்லைப் பகுதியில் பாளையம் இறங்கியது. டோரியன் நாட்டுப் படை தன்னுடைய நாட்டின்மீது படையெடுக்கப் போகின்றது என்ற செய்தியைக் கேள்விப்பட்ட கோட்ருஸ், அவர்கள் தன் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களை எல்லாம் கொன்றொழிப்பதற்குப் பதிலாக, ‘நான் ஏன் எனது நமது உயிரை மக்களாகத் தரக்கூடாது’ என யோசித்துப் பார்த்தார். அந்த யோசனை அவருக்கு நல்லதாய் தோன்றவே, அவர் ஒரு சாதாரண விவசாயியைப் போன்று வேடம் தரித்து, டோரியன் படை பாளையம் இறங்கிய பகுதிக்குள் நுழைந்தார். பாளையத்திற்குள் டோரியன் ந...

தவக்காலம் முதல் ஞாயிறு YEAR - 02

தவக்காலம் முதல் ஞாயிறு (தொநூ 9: 8-15, 1 பேதுரு 3:18- 22, மாற் 1: 12-15) சோதனைகளை வெல்வோம்! உரோமை சாம்ராஜ்யம் உலகிற்குத் தந்த மிகச் சிறந்த பேச்சாளர் மார்க் ஆண்டனி. அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர் மட்டும் கிடையாது, புத்திக் கூர்மையானவர், பெரிய போர்வீரர், எதற்கும் அஞ்சாதவர், உறுதியானவர். இப்படி பல்வேறு திறமைகள் வாய்க்கப்பட்ட மார்க் ஆண்டனி மட்டும் நினைத்திருந்தால் உலகில் தோன்றிய பேரரசர்களில் தலைசிறந்த ஒருவராகத் திகழ்திருக்க முடியும். ஆனால், அவரால் அப்படித் திகழ முடியவில்லை. காரணம் அவரிடம் இருந்த பலவீனம், சோதனைக்கு எளிதாய் விழுந்துவிடக்கூடிய தன்மை. ஒருமுறை அவருடைய உதவியாளர் அவரைப் பார்த்துச் சொன்னார், (Oh, Marcus, oh colossal Child! Able to conquer the world, but unable to resist a temptation) உலகை வெல்ல முடிந்த உன்னால், உனக்கு வந்த சோதனையை வெல்ல முடியவில்லையே”. மார்க் ஆண்டனி மட்டும் தனக்கு வந்த சோதனைகளை - மாதுவிடம் விழாமல் - வெற்றி கொண்டிருந்தார் என்றால், உலக வரலாற்றில் பெரிய பேரரசராகத் திகழ்ந்திருக்கலாம், சோதனைகளை வெல்ல முடியாததால், அவர் ஒரு சதாரண மனிதரைப் போன்று ம...